சில்மிஷ ஆசாமிக்கு வலை
நொளம்பூர்:நொளம்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், நொளம்பூர் பகுதியில் மொபைல்போனில் பேசியபடி, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது, பைக்கில் வந்த நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து நொளம்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வருகின்றனர்.