உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தொழில் பழகுநர் முகாம்

 தொழில் பழகுநர் முகாம்

சென்னை: சென்னையில், ஐ.டி.ஐ. ,களில் பயிற்சி முடித்தோருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்க, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில் பழகுநர் முகாம், 9ம் தேதி முதல் நடக்க உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பயிற்சியாளருக்கு, மாதந்தோறும் உதவித்தொகையாக, 9,000 ரூபாய் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் என்ற www.apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, முகாமில் பங்கேற்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை