விருது வழங்கும் விழா
காசி முத்துமாணிக்கம் சென்னை, அண்ணா சாலையிலுள்ள ராணி சீதை மன்றத்தில், வி.ஜி.பி., உலக தமிழ்ச் சங்கமும், கவிதை உறவும் இணைந்து, கலைஞர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வர்த்தக அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கத்திற்கு, கலைஞர் விருது வழங்கினார். உடன், தமிழக அரசு மருத்துவமனைகள் இயக்குனர் ஜெயராஜமூர்த்தி, கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர்.