மேலும் செய்திகள்
மர்ம காய்ச்சல் 1 வயது குழந்தை பலி
29-Oct-2025
ஆவடி: ஆவடியில், காணாமல் போன மீன் வியாபாரி, கிருஷ்ணா கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். ஆவடி கன்னடபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; மீன் வியாபாரி. கடந்த 2ம் தேதி, மோரை அருகே மீன் வியாபாரம் செய்ய சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று மதியம் ஆவடி அடுத்த அரிக் கம்பேடு அருகே கிருஷ்ணா கால்வாயில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. ஆவடி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பார்த்தபோது, அது காணாமல் போன கிருஷ்ணமூர்த்தி என தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
29-Oct-2025