உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மாநகராட்சியில் ரூ.8,404.70 கோடி! பட்ஜெட் தாக்கல்...

சென்னை மாநகராட்சியில் ரூ.8,404.70 கோடி! பட்ஜெட் தாக்கல்...

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு, 2025 - 26ம் நிதியாண்டுக்கான, 8,404.70 கோடி ரூபாய் பட்ஜெட்டை, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார். கடந்தாண்டைவிட பற்றாக்குறை நிதி, 68.57 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோருக்கு தனிப்பிரிவு உள்ளிட்ட, 62 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.சென்னை மாநகராட்சியின், 2025 - 26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.நிதிநிலை அறிக்கையை, நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்து பேசியதாவது:சென்னை மாநகராட்சியில், 2025 - 26ம் நிதியாண்டில் வருவாய் வரவு, 5,145.52 கோடி ரூபாயாக இருக்கும். வருவாய் செலவினம், 5,214.09 கோடி ரூபாயாக இருக்கும். மூலதன வரவு, 3,121.65 கோடி ரூபாயாகவும், மூலதன செலவு, 3,190.61 கோடி ரூபாயாகவும் இருக்கும்.அதன்படி, மொத்த வரவினங்கள், 8,267.17 கோடி ரூபாய்; மொத்த செலவினங்கள், 8,404.70 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி மேயர் பிரியா, பட்ஜெட் தொடர்பாக அறிவிப்புகள் வெளியிட்டார்.கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில், மேயர் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவை:* தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் 15,000, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 18,000 ரூபாய் ஊதியத்தில், 141 உடற்கல்வி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த, 2.34 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்* விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தினம், 500 ரூபாய் என, பயணப்படி, உணவுப்படியாக, 62.55 லட்சம் ரூபாய் வழங்கப்படும்* பிறப்பு, இறப்பு பதிவேடுகளை பராமரிக்க, ஆவண காப்பகம் மேம்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறதுமுதியோர் தனிப்பிரிவு* பி.ஆர்.என்., கார்டன், செம்பியம், துரைப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நல பிரிவு அமைத்தலுக்கு, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது* சென்னையில் உள்ள, 1.80 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்* புதிதாக கட்டப்பட்ட, 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில், 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்படும்* விபத்துகளில் காயமடையும் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்* போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலைகளை சுத்தம் செய்யும் வகையில், சிறிய அளவிலான 20 வாகனங்கள், 8 கோடி ரூாய் மதிப்பில் வாங்கப்படும்* காற்று மாசை தடுக்க, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயு, மின்சாரம் வாயிலாக இயங்கும் வாகனங்கள் படிப்படியாக கொண்டு வரப்படும்* வணிக வளாக வாடகைதாரர்கள் இணையதளம் வாயிலாக நேரடியாக வாடகை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்* மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உணவு மண்டலங்கள், இந்தாண்டு இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்* மணலி, ஐ.ஓ.சி.எல்., டோல்கேட், சாலிகிராமம் ஆகிய பேருந்து முனையங்கள், 16 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்* 171 விளையாட்டு திடல்களில் தற்காலிக பாதுகாவலர்கள் ஒப்பந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்பூங்காக்கள்* பூங்காக்களில் புத்தக வாசிப்பு மண்டலங்கள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்* பூங்காக்களுக்கு வரும் மக்கள் பயன்பெறும் வகையில், மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையம் அமைக்கப்படும்திடக்கழிவு மேலாண்மை* பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், பயோ மைனிங் வாயிலாக மீட்டெடுத்த நிலத்தில், 14 கோடி ரூபாய் மதிப்பில் 50 டன் கொள்ளவு கொண்ட உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்படும்* மண்டலங்களில் தலா 10 டன் பிளாஸ்டிக் சிப்பமாக்கல் மையங்கள், 22.25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்மேம்பாலம்* மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படத்த, 42 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்* வாகன போக்குவரத்துள்ள 18 சுரங்கப்பாதைகளில், புதிய டீசல் மோட்டார்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும். வண்ணங்கள் பூசப்பட்டு, மின் விளக்கு அலங்காம் ஆகியவை, 14.40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்* பொதுமக்கள் சேவைகள், கேள்விகள், பதில்கள், புகாரினை கையாளுதல், முகவர் சேவை ஆகியவை வாட்ஸாப் அடிப்படையில், 4.46 கோடி ரூபாய் மதிப்பில் தகவல் தொடர்புகளை உருவாக்கப்படும்* சிறந்த வாகன போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில், ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்* குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பையை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணிக்க 400 எண்ணிக்கையிலாக கேமராக்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்* மூன்று வட்டார கமிஷனர் அலுவலகங்களிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.* மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி, 3 கோடி ரூபாயில் இருந்து, 4 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோல், கவுன்சிலர்களின் மேம்பாட்ட நிதி, 50 லட்சம் ரூபாயில் இருந்து, 60 லட்சமாக உயர்த்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.வரி உயர்வால்பற்றாக்குறைகுறைந்ததுகடந்தாண்டு, 452.01 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்தது. சொத்துவரி, தொழில் வரி உயர்வு உள்ளிட்டவற்றால், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் வரவு, வருவாய் செலவினத்தை ஒப்பிடுகையில், 68.57 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் விபரங்கள்!

சொத்துவரி - ரூ.2,020 கோடிதொழில் வரி - ரூ.600 கோடிமுத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி - ரூ.400 கோடிமாநில நிதிக்குழு மானியம் - ரூ.1,150 கோடி ரூபாய்இதர வருவாய் - ரூ.919.53 கோடி

செலவினங்கள்!

பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம் - ரூ.2,232.21 கோடிநிர்வாக செலவு - ரூ.297.01 கோடிபழுதுபார்த்தல், பராமரிப்பு பணி செலவினங்கள் - ரூ.1,864.44 கோடிகடனுக்கான வட்டி செலுத்துதல் - ரூ.67.65 கோடி

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

பேருந்து சாலைகள் - ரூ.628.35 கோடிமழைநீர் வடிகால்வாய்கள் - ரூ.1,032.25 கோடிதிடக்கழிவு மேலாண்மை - ரூ.352 கோடிபாலங்கள் - ரூ.164.03 கோடிகட்டடம் - ரூ.413.63 கோடிதகவல் தொழில்நுட்பம் - ரூ.9 கோடிமின்சாரம் - ரூ.50.40 கோடிஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் - ரூ.10 கோடிஇயந்திரப்பொறியியல் - ரூ.22 கோடிகல்வி - ரூ.5 கோடிசுகாதாரம் - ரூ. 4.20 கோடிமருத்துவ சேவைகள் துறை - ரூ.40 லட்சம்சிறப்பு திட்டங்கள் - ரூ. 179.03 கோடிபூங்கா, விளையாட்டுத்திடல் - ரூ.39.30 கோடிமண்டலங்கள் - ரூ.279.01 கோடிமாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம் - ரூ.100 கோடிமேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டம் - ரூ. 3 கோடி

வருவாய் விபரம் சதவீதத்தில்

வரி வருவாய் - 52 சதவீதம்வரி அல்லாத வருவாய் - 10 சதவீதம்அரசு ஒதுக்கீடு செய்யும் வருவாய் - 30 சதவீதம்அரசு மானியம் - 8 சதவீதம்

ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது!

வரி வருவாய் - 35 சதவீதம்வரி அல்லாத வருவாய் - 7 சதவீதம்ஒரு ஒதுக்கீட்டு செய்யும் வருவாய் - 20 சதவீதம்அரசு மானியம் - 5 சதவீதம்மூலதன மானியம் - 18 சதவீதம்கடன் - 15 சதவீதம்

ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது!

பணியாளர் செலவினம் - 29 சதவீதம்அலுவலக செலவுகள் - 4 சதவீதம்இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் - 24 சதவீதம்வட்டி மற்றும் இதர நிதி செலவினங்கள் - 1 சதவீதம்மற்ற செலவுகள் - 1 சதவீதம்மூலதன செலவுகள் - 41 சதவீதம்

-

----கல்வி:* பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 40.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.* ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 211 பள்ளிகளுக்கு, 86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.* உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக, 'வளமிகு ஆசிரியர் குழு' அமைக்க மண்டலத்திற்கு, 5 லட்சம் ரூபாய் என, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.* பள்ளிகளில், 2,300 வகுப்பறைக்கும் புவி உருண்டை வழங்குவதற்காக, 39.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.* நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.* நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சமப்படுத்துவதற்காக, 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.* தடகள போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தரமான விளையாட்டு ஷூ வழங்க, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.* மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்க, 7.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.* மழலையர் பள்ளிகளில் மின்னணு பலகைகள், 1.66 கோடி ரூபாய் நிறுவப்படும்.* உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காட்சி வழியாக பாடங்களை விளக்கிட பெரிய அளவிலான மின்னணு பலகைகள், 64.80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.* ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றாலை வளர்ப்பதற்கான பயிற்சிக்கு, 20 லட்சம் ஒதுக்கப்படும்.* மழலையர் பள்ளிகளில் பல வண்ணங்களில் மேஜை, நாற்காலிகள் வழங்க, 3 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும்.-பொது சுகாதாரத்துறை!* அனைத்து மயான பூமிகளில், தகன மேடைக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க, 15 கோடி ரூபாய் மதிப்பில், 'ஜெனரேட்டர்கள்' நிறுவப்படும்.* பிறப்பு, இறப்பு பதிவேடுகளை பராமரிக்க ஆவண காப்பகம் மேம்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.* பி.ஆர்.என்., கார்டன், செம்பியம், துரைப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நல பிரிவு அமைத்தலுக்கு, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* சென்னையில் உள்ள, 1.80 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள, மருந்து காப்பக அறைகளின் அளவுக்கு ஏற்ப, குளிரூட்டு வசதிகள், 3 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.* சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.* புதிதாக கட்டப்பட்ட, 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில், 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்படும்.* புதிதாக கட்டப்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில், வளர்ப்பு பிராணிகளுக்கான மருத்துவமனைகள், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்படும்.* விபத்துகளில் காயமடையும் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.* வடசென்னையில் மூலக்கொத்தளம் மயான பூமியில், இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.-மருத்துவ சேவைகள் துறை!* மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கிருமி நாசினி புகைக்கருவிகள், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.* நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு, 51 லட்சம் மதிப்பில்,மின் அதிர்வலைகள் வாயிலாக சீரற்ற இதய துடிப்பை சீராக்க உதவும் கருவி, 19 எண்ணிக்கையில் வாங்கப்படும்.* மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை சேமிக்க, திரு.வி.க.நகர் மண்டலம், அம்பாள் நகரில் தரை தளம் மற்றும் இரண்டு அடுக்கு புதிய கட்டடம், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.-இயந்திர பொறியியல் துறை!* போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலைகளை சுத்தம் செய்யும் வகையில், சிறிய அளவிலான 20 வாகனங்கள், 8 கோடி ரூாய் மதிப்பில் வாங்கப்படும்.* காற்று மாசை தடுக்க, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயு, மின்சாரம் வாயிலாக இயங்கும் வாகனங்கள் படிப்படியாக கொண்டு வரப்படும்.-வருவாய் துறை!* புதிதாக மற்றும் சொத்து வரி செலுத்துவோருக்கு, 'க்யூ ஆர் கோடு' வசதி ஏற்படுத்தப்படும்.* வணிக வளாக வாடகைதாரர்கள் இணையதளம் வாயிலாக நேரடியாக வாடகை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.* மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், அடிப்டை வசதிகளுடன் கூடிய, உணவு மண்டலங்களில், இந்தாண்டு இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்.பேருந்து சாலைகள் துறை!* மாநகராட்சியில், 200 எண்ணிக்கையிலான புதிய பேருந்து நிழற்குடைகள், 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.* ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய பேருந்து நிறுத்தங்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் இருந்து, இழுவிசை கூரையாக, 4.47 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றப்படும்.* மணலி, ஐ.ஓ.சி.எல்., டோல்கேட், சாலிகிராமம் ஆகிய பேருந்து முனையங்கள், 16 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.-பூங்கா மற்றும் விளையாட்டு திடல் துறை:* மாநகராட்சியின், 150 விளையாட்டு திடல்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும்.* 171 விளையாட்டு திடல்களில் தற்காலிக பாதுகாவலர்கள் ஒப்பந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* பூங்காக்களில் புத்தக வாசிப்பு மண்டலங்கள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* பூங்காக்கள் பழுது பார்க்கும் பணி மற்றும் மேம்படுத்தும் பணி மேற்கொள்ள, 43 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.* அண்ணாநகர், எம்.எம்.டி.ஏ., டாக்டர் நடேசன் ஆகிய 10 பூங்காக்களில், பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்தும் வகையில். சிறப்பம்சம் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்தப்படும்.* வட சென்னையில், ஆண்டார் குப்பம், ஏலத்தனுார், சடையன்குப்பம், பர்மா நகர் ஆகிய இடங்களில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக இறகு பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.* மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.* பூங்காக்களுக்கு வரும் மக்கள் பயன்பெறும் வகையில், மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையம் அமைக்கப்படும்.திடக்கழிவு மேலாண்மை துறை!* பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், பயோ மைனிங் வாயிலாக மீட்டெடுத்த நிலத்தில், 14 கோடி ரூபாய் மதிப்பில் 50 டன் கொள்ளவு கொண்ட உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்படும்.* மண்டலங்களில் தலா 10 டன் பிளாஸ்டிக் சிப்பமாக்கல் மையங்கள், 22.25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.-சிறப்பு திட்டங்கள் துறை!* மேம்பாலங்கள் மற்றுமு் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படத்த, 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.-கட்டடத்துறை!* இறந்தோர் உடல் பாதுகாப்பு மையம், தனியார் பங்களிப்புடன், வேலங்காடு மயான பூமியில் செயல்படுவதுபோல், மூலக்கொத்தனம், பெசன்ட் நகர் மயான பூமியில் செயல்படுத்தப்படும்.-மின்துறை!* உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, 4.70 கோடி ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும்.* 18 வாகன போக்குவரத்து சுரங்கப்பாதையில், புதிய டீசல் மோட்டார்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் அமைக்கப்படுவதுடன், வண்ணங்கள் பூசப்பட்டு, மின் விளக்கு அலங்காம் ஆகியவை, 14.40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.-தகவல் தொழில்நுட்பம்!* பொதுமக்கள் சேவைகள், கேள்விகள், பதில்கள், புகாரினை கையாளுதல், முகவர் சேவை ஆகியவை வாட்ஸ் ஆப் அடிப்படையில், 4.46 கோடி ரூபாய் மதிப்பில் தகவல் தொடர்புகளை உருவாக்கப்படும்.-ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்!* ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய வீடியோ வால் திரை, 2.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.* சிறந்த வாகன போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில், ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.* தனியார் கூட்டாண்மை முறையில், 6 கோடி ரூபாய் செலவில், மின்னணு அறிவிப்பு பலகைகள், 100 இடங்களில் அமைத்து, அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் செய்தவன் வாயிலாக கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.* குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பையை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணிக்க 400 எண்ணிக்கையிலாக கேமராக்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.* மூன்று வட்டார கமிஷனர் அலுவலகங்களிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.-மன்றத்துறை!* மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி, 3 கோடி ரூபாயில் இருந்து, 4 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோல், கவுன்சிலர்களின் மேம்பாட்ட நிதி, 50 லட்சம் ரூபாயில் இருந்து, 60 லட்சமாக உயர்த்தப்படும்.-நிதித்துறை!* 2025 - 26ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டத்தின் காலநிலை முதலீடுகள் குறித்த அறிக்கை, மாநகராட்சியால் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !