உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மாநகர பஸ் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல்

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மாநகர பஸ் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை, அயனாவரத்தில் இருந்து நேற்று காலை பெசன்ட் நகர் நோக்கி, '23 சி' என்ற வழித்தட பேருந்து சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலை மேம்பாலத்தில், காலை 10:00 மணியளவில் சென்றபோது, திடீரென பழுதாகி நின்றது.பேருந்தை தொடர்ந்து வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை போக்குவரத்து போலீசார், நெரிசலை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பழுதாகி நின்ற மாநகர பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அரை மணி நேரத்திற்கு பின், அண்ணா சாலையில் போக்குவரத்து சீரானது. பயணியர் கூறியதாவது:மாநகர பேருந்துகள் அடிக்கடி பழுதாக நடு வழியில் நிற்பது தொடர்கதையாக உள்ளது. பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவரச உதவிக்கான சுவிட்சுகளும் பழுதாகி உள்ளன. முறையாக பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். பேருந்துகள் பராமரிப்பில் மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ