கிரைம் கார்னர்: பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு
சேலையூர்: சேலையூரை அடுத்த செம்பாக்கம், குருசாமி நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 24. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி, கவுரிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஐஸ்வர்யாவின் மொபைல் போனை பறித்துக் கொண்டு மாயமாகினர். இது தொடர்பாக, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.