மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது
24-Mar-2025
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, அசோக் பில்லர் மதுக்கடை அருகில், மர்ம நபர் கும்பல் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு, குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட, அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த மணிமாறன், 25, குமரேசன், 28, வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ்வரன், 22, சஞ்சய், 23 ஆகிய நான்கு பேரை பிடித்தனர். இக்கும்பல், வியாசர்பாடியில் குடிபோதையில் அடிக்கடி அடிதடி மற்றும் வாய் தகராறில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.
24-Mar-2025