உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்கில் மோதிய லாரி முதியவர் உயிரிழப்பு

பைக்கில் மோதிய லாரி முதியவர் உயிரிழப்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தா்ர. திருவள்ளூர் மாவட்டம் மேலகொண்டையூரைச் சேர்ந்தவர் சத்யானந்தம், 60. இவர், 'ஹோண்டா ஷைன்' பைக்கில் நேற்று, மீஞ்சூர்-- - வண்டலுார் வெளிவட்ட சாலையில், நசரத்பேட்டை அருகேக சென்றார். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், சத்யானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜ்குமார், 26, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை