உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின் இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் பங்குனி உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.காலை 7:30 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளினர்.தொடர்ந்து காலை 8:00 மணி முதல் 8:30 மணிவரை பக்தர்களின் சிவநாமம் விண்ணைப் பிளக்க கொடியேற்ற நிகழ்வு நடந்தது. இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின், பவழக்கால் விமான சேவை நடந்தது.இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜைக் காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகன புறப்பாடும் நடந்தது.நாளை அதிகாலை 6:00 மணிக்கு அதிகாரநந்தி காட்சி நடக்கிறது. 7ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. வரும் 9ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அதேபோல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும், பங்குனி உத்திர பெருவிழா நேற்று இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. நாளை அதிகார நந்தி சேவையும், 7ம் தேதி இரவு 9:00 மணிக்கு ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. முக்கிய நாளான 9ம் தேதி காலை 6:30 மணிக்கு சந்திரசேகரர் தேர் திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை