மேலும் செய்திகள்
சிறுமியிடம் அத்துமீறல் பூசாரிக்கு 'போக்சோ'
25-Feb-2025
புளியந்தோப்பு, சிறுமி கர்ப்பம் இளைஞருக்கு ' போக்சோ '
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் 16 வயது மகள், புளியந்தோப்பு திரு.வி.க., நகரைச் சேர்ந்த அஸ்வின், 19, என்பவரை, காதலித்து வந்துள்ளார்.இந்த விஷயம் அறிந்து, பெண்ணின் தாய் கண்டித்துள்ளார். இதனால் கடந்தாண்டு மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அஸ்வினை திருமணமும் செய்துள்ளார்.இந்நிலையில் வீட்டுக்கு வந்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எழும்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிந்து அஸ்வினிடம் விசாரித்து வருகின்றனர்.
25-Feb-2025