இசை கல்லுாரியில் தமிழிசை விழா நாளை துவக்கம்
சென்னை, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள அரசு இசைக்கல்லுாரியில், தமிழிசை விழா, நாளை காலை துவங்க உள்ளது. இது, நாளை மறுநாளும் நடக்கும்.இதை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார்.நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், குரலிசை, வயலின் இசை உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளில், கலைஞர்களும் மாணவர்களும் ஈடுபட உள்ளனர்.தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 21ம் தேதி பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடக்க உள்ளது.