உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் சிக்கி டிரைவர் பலி

பஸ்சில் சிக்கி டிரைவர் பலி

கிண்டி, வேளச்சேரி, உதயம்நகரை சேர்ந்தவர் முருகேசன், 55. சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர். நேற்று, வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். கிண்டி, நேருநகர் சாலை பள்ளத்தில் சிக்காமல் இருக்க, திடீரென பிரேக் பிடித்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் வாகனத்தில் மோதியதில், இருவரும் கீழே விழுந்தனர். முருகேசன் சாலையில் வலது பக்கத்தில் விழுந்தபோது, மேடவாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி சென்ற மாநகர பேருந்து முன் சக்கரத்தில் சிக்கி பலியானார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ