பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது
வண்ணாரப்பேட்டை, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 18 வயது பெண். இவரது வீட்டின் முதல் மாடியில் மகேந்திரன், 51 என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்துள்ளார். குடியேறியதில் இருந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த பெண் நேற்று புகார் அளித்தார். இதன்படி, போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.