இரு லாரிகள் மோதி விபத்து
பூந்தமல்லி: வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியை கடந்து சென்ற லாரி மீது, பின்னால் சிமென்ட் கலவை ஏற்றிச்சென்ற லாரி மோதியது. இதில், முன்னால் லோடு இல்லாமல் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. சிமென்ட் கலவை ஏற்றிச்சென்ற லாரியின் முன்பாகம் சேதமாகி, சாலையின் குறுக்கே நின்றது. இந்த விபத்தில், இரண்டு லாரி ஓட்டுநர்களும் காயமடைந்தனர். இந்த விபத்தால், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற போக்குவரத்து போலீசார், கிரேன் வாகனம் மூலம் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தால், வெளிவட்ட சாலையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நெரிசல் ஏற்பட்டது.