உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாஷிங் மெஷின் தீப்பிடித்து எரிந்து விபத்து

வாஷிங் மெஷின் தீப்பிடித்து எரிந்து விபத்து

வடபழனி, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன், 60. இவர், நேற்று மாலை, தனது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை ஆன் செய்தார்.அப்போது, திடீரென மின் கசிவு ஏற்பட்டு, வாஷிங் மெஷின் தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டில் இருந்த துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாகின.தகவல் அறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை