ஹுண்டாய் கார் ஆலையில் ஊழியர்கள் போராட்டம்
இருங்காட்டுக்கோட்டை, இருங்காட்டுக் கோட்டை சிப்காட், ஹுண்டாய் கார் தொழிற்சாலையில், 2,000த்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றன ர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், தொழிற்சாலையின் ஆதரவில் இயங்குவதாக கூறப்படும் 'யுனைடெட் யூனியன்' தொழிற்சங்கம் மூலம் அண்மையில் கையெழுத்தானது.இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்து, தங்களிடம் பேச்சு நடத்த வேண்டும். சங்கத்தை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற் சங்கத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.