உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

ஏரியில் மூழ்கி இளைஞர் பலி

குன்றத்துார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து, 19. குன்றத்துார் அருகே சோமங்கலத்தில் தங்கி, அதே பகுதி தனியார் தார் கலவை தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.சுடலைமுத்துவுக்கு, அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும் என கூறப்படுகிறது. நேற்று மாலை, சோமங்கலம் சித்தேரியில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். சோமங்கலம் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை