உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாருங்கள் மாணவர்களே வரவேற்ற கற்பகம் கல்லுாரி!

வாருங்கள் மாணவர்களே வரவேற்ற கற்பகம் கல்லுாரி!

கோவை, : ஈச்சனாரி, கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சுமதி கலந்து கொண்டு, மொழி ஆளுமையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, மொழித்திறனையும், தன்னம்பிக்கையையும், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கல்லுாரியின் முதல்வர் மணிமாறன், முதலாம் ஆண்டு துறைத்தலைவர் பத்மநாபன், பேராசிரியர்கள், கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !