கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
வால்பாறை; கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சஷ்டி நாளான நேற்று காலை, 6:30 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின் காலை, 8:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், கந்தர் சஷ்டி கவச பக்தி பாடல்களை பாடி முருகனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி நாளான நேற்று சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.