உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய வாலிபால் போட்டியில் முதலிடம்

குறுமைய வாலிபால் போட்டியில் முதலிடம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான வாலிபால் போட்டியில், செஞ்சேரிமலையடிபாளையம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான வாலிபால் போட்டி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் நடைபெற்றது. அதில், செஞ்சேரிமலையடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். மேலும், பீச் வாலிபால் போட்டியில், 19 வயதுக்குட்பட்ட மாணவர், மாணவியர் பிரிவில் முதலிடமும்; தடகள போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில், பிளஸ் 2 மாணவி ஜீவிதா இரண்டாமிடமும் பெற்றனர். குண்டு எறிதலில் பிளஸ் 1 மாணவர் பிரவின் மூன்றாமிடமும், உயரம் தாண்டுதலில் பிளஸ் 2 மாணவர் கோகுலகிருஷ்ணன் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ