மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி பணிகள்: கலெக்டர் உத்தரவு
03-May-2025
கோவை: கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், கோவை எம்.பி.,ராஜ்குமார் தலைமையில் நடந்தது.நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து, அதிகாரிகள் விளக்கினர். நிலுவையிலுள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, எம்.பி.,ராஜ்குமார் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதிசீனிவாசன், கூடுதல் கலெக்டர், மகளிர் திட்ட இயக்குநர், மற்றும் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
03-May-2025