வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதன் மூலம் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் - எங்கேனும் தவறான நிகழ்வுகள், போதை கும்பலின் அட்டகாசம், ஒதுக்குபுறமான இடங்களில் ஆள் நடமாட்டங்கள் போன்றவற்றை போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுங்கள். நமக்கெதுக்கு வம்பு, வீண் வேலை என்று ஒதுங்கிவிடாதீர்கள். உங்களின் இந்த செய்கை யாரோ ஒரு அப்பாவி பெண்ணை, குழந்தையை, சிறுவர்களை காப்பாற்ற நிச்சயம் உதவும்.
இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் கூடுதல் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். நடு இரவில், உணவு உண்பது, செரிமான கோளாறு வரும் என்பதால், காபி அல்லது டீ மட்டும் கொடுக்கலாம். அதுவும், ரோந்து போலீசுக்கு, இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பீட்-டுக்கும் இரண்டு காவலர்கள் செல்ல வேண்டும். அவர்களில் ஒருவருக்கு துப்பாக்கி வழங்க வேண்டும். கோவை சம்பவத்தில், சந்தேகத்திற்கு இடமாக, கார் நிற்பதை ரோந்து போலீஸ் பார்த்திருந்தால், அவர்களிடம் இந்த சமயத்தில், ஆள் அரவமற்ற, இந்த பகுதியில் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்திருந்தால், அந்தப் பெண்ணின் கற்பு காப்பாற்றப் பட்டிருக்கும். மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும், போன் செய்து, உங்கள் பெண் இரவு நேரத்தில், யாரோ ஒரு பையனுடன் வெளியே சுற்றி கொண்டிருக்கிறார் என்பதையும் காவல்துறை தெரிவித்திருக்கலாம். பெண்கள், ஆள் அரவமற்ற பகுதிக்கு செல்லக் கூடாது. இரவு 8 மணிக்கு மேல், வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது போன்ற சுய கட்டுப்பாடு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அவசியம். அதே போல், வெளியூருக்கு பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர்கள், கல்லூரி அறை எடுத்து கொடுக்க வேண்டும். கல்லூரி விடுதியில், கட்டுப்பாடு இருக்கும். கண்காணிப்பும் இருக்கும். பாதுகாப்பும் இருக்கும். தனியே வீடு எடுத்து தங்கினால், பாதுகாப்பில்லை. மாணவ செல்வங்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல், தாங்கள் பாதிக்கப்பட்ட பிறகு, போலீசையும், மாநில அரசையும் மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. எந்த அரசாக இருந்தாலும், 24 மணி நேரமும், அனைவருக்கும் காவல்துறை ரோந்து பாதுகாப்பு கொடுக்க முடியுமா ? நமக்கு நாமே பாதுகாப்பு என்ற தெளிவு வேண்டும் இரவில், நேரங்கெட்ட நேரத்தில், ஆள் அரவமற்ற பகுதியில், காருக்குள் உட்கார்ந்து காதல் பண்ணியது தவறு. பெற்றோர்கள், படிக்க அனுப்பினால், படிப்பை முடிக்க வேண்டும். படிப்பு முடிந்து, திருமண வயது வந்தவுடன், அவர்களே நல்ல வரனாக பார்த்து கட்டி வைப்பார்கள்.