கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை: நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞரணி சார்பில், கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலை வர் சண்முகம், ஏர்முனை இளைஞரணி சுரேஷ், மாணிக்கராஜ், முத்துசாமி, ரவிக்குமார் பங்கேற்றனர். 'தொழிற்சாலை கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்' என்றனர் விவசாயிகள்.