உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

 சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடபுதுாரில் உள்ள தம்பிராஜ் நகரில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள, மின்கம்பம் கடந்த ஒரு ஆண்டாக சேதமடைந்த நிலையில், இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில், கம்பத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தியதை தொடர்ந்து, புதிய மின் கம்பம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சேதமடைந்த கம்பத்தை மாற்றி அமைக்காமல், மின் பணியாளர்கள் ரோட்டோரத்தில் கிடப்பில் போட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ