உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவியரசு, வீரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார். இதில், கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பாபு, பொற்செழியன், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி