உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குமராட்சி புத்துார் பகுதியில் 14 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

குமராட்சி புத்துார் பகுதியில் 14 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

காட்டுமன்னார்கோவில்: வடக்கிழக்கு பருவ மழையால் குமராட்சி, புத்துார் பகுதியில் 14 குடிசை வீடுகள் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் புத்துார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர் மழையால் குமராட்சி பகுதியில் நந்திமங்கலம் சுகந்தி, வெள்ளூர் ராஜவள்ளி, சிற்றரசு, கீழக்கரை இளங்கோவன், வெள்ளையம்மாள் உட்பட 14 பேரின் குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது.இடிந்து சேதமான வீடுகளை வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை