உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டும் குழியுமான சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

குண்டும் குழியுமான சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம்:குண்டும் குழியுமாக உள்ள தே.கோபுராபுரம் - சித்தேரிக்குப்பம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் - சித்தேரிக்குப்பம் கிராம இணைப்பு சாலையில், லாரி, வேன், டிராக்டர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது சாலை முழுவதும், ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, தே.கோபுராபுரம் - சித்தேரிக்குப்பம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ