உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயில் கடலுார் வழியாக இயக்க ஏற்பாடு

தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயில் கடலுார் வழியாக இயக்க ஏற்பாடு

கடலுார்:கோடை காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வழியாக தாம்பரம்-திருச்சி இடையே வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோடை காலத்தில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன் கருதி நெரிசலை குறைக்கும் வகையில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து ஏப்.,29ம் தேதி முதல் ஜூன்.,29ம் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5:35 மணிக்கு சிறப்பு ரயில் (06190) புறப்பட்டு, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலுார்), பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக பகல் 12:30 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு சிறப்பு ரயில் (06191) புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அன்றிரவு 10:40 மணிக்கு திருச்சி சென்றடையும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி கடந்த ஏப்., 4ம் தேதி முதல் ஏப்., 27ம் தேதி வரை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், தற்போது வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ