உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்

சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி இறந்தனர். கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்துாரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆஷா, 24. இவர்கள் மகன் குணா, 6; அதே பகுதியை சேர்ந்த சாஸ்தாவின் மகள் சிவதர்ஷினி, 8; அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, 4:30 மணியளவில் ஆஷா தன் மகன் குணா மற்றும் சிவதர்ஷினியுடன் அதே பகுதியில் உள்ள அசகளத்துார் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஆஷா மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிவதர்ஷினியும், குணாவும் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். சிறுபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ