உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய யோகா போட்டியில் வெண்கலம் அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு பாராட்டு

தேசிய யோகா போட்டியில் வெண்கலம் அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு பாராட்டு

கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவி, தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் சென்று சாதனை படைத்தார். கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ஒளஷியா. இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத் தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவகுமார், பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ