வள்ளி விலாஸ் ஆலயாவில் குழந்தைகள் தினம்
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு வாழ்த்திப் பேசினர். குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக ஆசிரியர்கள் சிறந்த கருத்துகள் சார்ந்த நாடகங்கள் நடித்து காட்டினர். குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது.