மேலும் செய்திகள்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
06-Sep-2025
கடலுார்: திருவந்திபுரத்தில் தேசிகர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தேசிகர் சன்னதியில், பிரம்மோற்சவம் கடந்த 22ம் தேதி, கொடியேற்றத்துடன்துவங்கியது. தினமும் காலை, மாலை வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும்நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருமாளிகைக்கு தேசிகரை எழுந்தருளச் செய்து, சேவைசாற்றுமுறை, பாராயணம் நடந்தது. திருவந்திபுரம் மலையில் ஹயக்ரீவர் சன்னதியில், நேற்று தேசிகருக்கு ரத்தனாங்கி சேவையில், மங்களாசாசனம்நடந்தது. இன்று 3ம் தேதி தங்கப்பல்லக்கில் வீதியுலா, இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.
06-Sep-2025