உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல கோடி மதிப்புள்ள கட்டடத்தை பாழாக்கும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்

பல கோடி மதிப்புள்ள கட்டடத்தை பாழாக்கும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்

நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., அலுவலகம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடப்பதால் மூன்றாண்டிற்க முன் அந்த அலுவலகம் மூடப்பட்டது. பின்னர், சில மாதங்கள் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டது. சில மாதங்களில் அந்த பணியும் நிறுத்தி, அலுவலகம் நிரந்தரமாக மூடினர். நகரின் மையப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கட்டடம் பயன்படுத்தாததால் புதர் மண்டி பாழாகிறது. அந்த கட்டடத்தை வேறு அரசு அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டாலாவது நிறுவனத்திற்க வருமானம் கிடைக்கும். மூடிக் கிடக்கும் இந்த கட்டிடம் புதர் மண்டி இருப்பதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அருகில் வசிக்கும் மக்கள் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை