உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம்

நெல்லிக்குப்பம்: கடலுார் அடுத்த குமாரப் பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார், 48. நெல்லிக் குப்பம் ஈ.ஐ.டி., பாரி எம்ப்ளாயீஸ் ஸ்டோரில் செயலாளராக பணியாற்றி வந்தார்.நேற்று, இறகுபந்து விளையாடியபோது மயங்கி விழுந்தவர் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.அதையடுத்து, கடலுார் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் இறந்த ராஜ்குமாரின் கண்களை தானமாக பெற்றனர். இறந்த ராஜ்குமார் உடல் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அவரது மனைவி மலர்கொடி, மகள்கள் பூர்ணிமா, காயத்ரி, அரிமா நிர்வாகி கல்யாணசுந்தரம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ