உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஜினியரிங் மாணவர் குளத்தில் மூழ்கி பலி

இன்ஜினியரிங் மாணவர் குளத்தில் மூழ்கி பலி

கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் நிதிஷ்குமார், 18. இவர் சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர், நேற்று காலை காலைக்கடன் கழிப்பதற்காக அதே ஊரிலுள்ள ஏரிக்கு சென்றவர் வலிப்பு ஏற்பட்டு குளத்தில் மயங்கிவிழுந்து கிடந்தார். அதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !