மந்தாரக்குப்பத்தில் கால்பந்து போட்டி
மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பத்திதல், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.ஜார்ஜ் பெஸ்ட் கால்பந்து குழு சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்து. இதில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்பந்து கிளப் நிர்வாகிகள் குமரன், ராஜூ, வேல்முருகன், கண்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.