அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பிரிட்டிஷ் பேரரசின் வர்த்தக மையமாக விளங்கிய கடலுார்
தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கடலுார். கூடலுார் என்ற வார்த்தையில் இருந்து அதன் பெயர் வந்தது, அதாவது தமிழில் சங்கமம் என்று பொருள். கடலுார் என்பது பெண்ணையாறு, கெடிலம் மற்றும் பரவனாறு உள்ளிட்ட ஆறுகள் சந்திக்கும் இடம். கடலுார் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் வர்த்தக மையமாகவும் இருந்தது. கடலுார் மீன்பிடித் தொழில்கள், துறைமுகம் தொடர்பான தொழில்கள், ரசாயனம், மருந்தியல் மற்றும் எரிசக்தி தொழில்களின் தாயகமாகும். சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, பாண்டவர்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் மராத்தியர்கள், திப்பு சுல்தான், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பேரரசு ஆகியோரால் கடலுார் நகரம் ஆளப்பட்டது. பண்டைய காலத்தில் பழைய நகரம் துறைமுகமாக கருதப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் வர்த்தகத்திற்காக கடலுார் வந்தனர். மேலும் கடலுார் நகரம் தங்கள் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இதன் காரணமாக பிரெஞ்சுக்காரர்கள் - ஆங்கிலேயர்கள் இடையே போர் நடந்தன. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் தங்கள் வணிகக் குடியிருப்புகளைக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் கடலுாரில் தங்கள் குடியிருப்புகளைக் கொண்டிருந்தனர். கடலுார் பகுதியை ஆள, ஆங்கிலேயர்கள் பல கோட்டைகளைக் கட்டினர். கி.பி., 1653 ல் ராணுவ நடவடிக்கைகளுக்கான மையமாக தேவனாம்பட்டினத்தில் செயின்ட் டேவிட் கோட்டையைக் கட்டினர். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய பகுதியாக கருதி ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையில் இருந்து ஆட்சி செய்தனர். ஆனால் 1758ம் ஆண்டில் செயின்ட் டேவிட் கோட்டை பிரெஞ்சுக்காரர்கள் தாக்கினர். அதன் பிறகு, இந்தக் கோட்டை அதன் அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினர். நகரத்தை ஆள ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வேறு சில கட்டடங்களும் உள்ளன. கார்டன் ஹவுஸ் ராபர்ட் கிளைவின் வசிப்பிடமாக கட்டப்பட்டது. இப்போது கடலுார் மாவட்ட கலெக்டர் இங்கு வசிக்கிறார். கடலுாரில் கிளைவ் தெரு, லாரன்ஸ் சாலை, வெலிங்டன் தெரு மற்றும் இம்பீரியல் சாலை போன்ற பிரிட்டிஷ் பெயர்களைக் கொண்ட சில தெருக்கள் சான்றாக உள்ளன.