சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
கடலுார் : கடலுாரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.கடலுார் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதை பொருள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், லாமேக், பாலகிருஷ்ணன், சபியுல்லா, விஜயகுமார், மோகன், ராஜா, சவுமியா, ராமதாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.