உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

மங்கலம்பேட்டை; விருத்தாசலம் அருகே பைக்கில் டாஸ்மாக் மதுபாட்டில் கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மங்கலம்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உளுந்துார்பேட்டை அடுத்த பு.கிள்ளனுார் கிரமத்தைச் சேர்ந்த முருகன், 48, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி