மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் அமைச்சர் நிவாரண உதவி
கடலுார்: கடலுார் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் பெண்ணையாற்று தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கணேசன் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கினார்.பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளான அண்ணா கிராமம், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், பகண்டை, கோழிப்பாக்கம், காராமணிக்குப்பம், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.மேல்பட்டாம்பாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கணேசன் நிவாரண உதவி வழங்கினார். வெங்கட்ராமன், தனிகைசெல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.