எம்.எல்.ஏ., ஆறுதல்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசன் குட்டைத்தெருவைச்சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் விக்னேஷ்,18; கடந்த 20ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் திருக்குளத்தில் கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்நிலையில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார். மாவட்ட செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் ரவி, தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், நகர செயலாளர் குப்புசாமி, வீராசாமி, வினோத், ஆனந்த மணிகண்டன், பிரசாந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.