உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாலுகா அலுவலகம் முன் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தாலுகா அலுவலகம் முன் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் தாலுகா அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் மருதவாணன் மாவட்ட குழு ஆளவந்தார், பக்கீரான், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு கருப்பையன், ராஜேஷ்கண்ணன் கண்டன உரையாற்றினர்.இதில், கடலுார் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். சேதமடைந்த சாலை, பாலங்கள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேசன், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை