உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளியம்பலம் ஜூவல்லர்சில் புது டிசைன் நகைகள் அணிவகுப்பு

வெள்ளியம்பலம் ஜூவல்லர்சில் புது டிசைன் நகைகள் அணிவகுப்பு

வெள்ளி விழா நிறுவனமாக புவனகிரி ஸ்ரீ வெள்ளியம்பலம் ஜூவல்லர்ஸ் திகழ்ந்து வருகிறது என, உரிமையாளர் முத்துக்குமரன் கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: புவனகிரியில் ஸ்ரீ வெள்ளியம்பலம் ஜூவல்லரி கடந்த 28 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன் மதிப்புடன், ஹால்மார்க் உரிமம் பெற்ற ஷோருமாக திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் வெள்ளி விழா கண்ட நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம். ஷோரூம் விரிவுபடுத்தப்பட்டு, குளிர்சாதன வசதியுடன் மிக பிரம்மாண்டமாக உள்ளது. தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்கள் வாடிக்கையாளர்களின், விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருகிறோம். 916 கே.டி.எம்., ஹால்மார்க் நகைகள் விற்பனை செய்வதுடன், வெள்ளிப் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்த வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி அணியும் வெள்ளி நகைகள் தரமான முறையில் புத்தம் புது டிசைன்களில் விற்பனை செய்கின்றோம். இன்றைய சேமிப்பு, நாளைய முதலீடு என்ற அடிப்படையில் தங்க நகை சேமிப்பு திட்டங்கள் உள்ளது. ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கும் ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் எங்களது கிளை நிறுவனமான 'ஏ.சி.பி., ேஹாம்ஸ்டே' பெயரில் புவனகிரி பாலம் எதிரில் தங்கும் விடுதியில் குளிரூட்டப்பட்ட அறைகள் குறைந்த வாடகைக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை