புதிய ரேஷன் கடை திறப்பு
சேத்தியாத்தோப்பு: ஜன. 30-: சேத்தியாத்தோப்பு அருகே, புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது. காட்டுமன்னாரகோவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் நந்தனார் மடம் மற்றும் சகஜானந்த விழாவிற்கு வருகை தந்த திருமாவளவன் எம்.பி., புதிய ரேஷன் கடை கட்டடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். ஸ் ரீமுஷ்ணம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், தமிழ்மணி, வெற்றிவேந்தன், பால சுந்தரம், கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.