நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விருத்தாசலம்: பெண்ணாடம் அடுத்த அரியராவியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கொள்முதல் நிலைய எழுத்தர் வேம்பு தலைமை தாங்கி னார். முன்னோடி விவசாயிகள் பழனிசாமி, அருணகிரி நாதன் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் ராமசாமி, ரமேஷ், சேப்பெருமாள், கொள்முதல் நிலைய உதவியாளர், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், அரியராவி, ஓ.கீரனுார் பகுதிகளில் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.