உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி நிர்வாக கள ஆய்வு கூட்டம்

ஊராட்சி நிர்வாக கள ஆய்வு கூட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்களுக்கான மாதாந்திர கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்ட அளவில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) தனபால் முன்னிலை வகித்தார். இதில், 7 ஒன்றியங்களை சேர்ந்த மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், குடிநீர், தெருவிளக்கு பிரச்னைகளை சரிசெய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்பின், வீட்டுவரிகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் கட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !