உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. தி ட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆடி நான்காம் வெள்ளியையொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை