உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கடலுார் : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளி்ல் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் இன்று (16ம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை