உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் புத்தாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மூத்த வக்கீல் சிவமணி தலைமை தாங்கி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். வக்கீல்கள் சரவணன், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் விநாயகம், பொருளாளர் மணி வாழ்த்தி பேசினர். விழாவில், வட்டத் தலைவர் ஜெயபால், செல்வம், நிர்வாகிகள் சிவகுருநாதன், தாஸ், நெடுஞ்செழியன், குமாஸ்தா பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ